மன்னார்குடி அருகே கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரகோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கார் அதிவேகமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் லோகேஷ் (12), ரஷீத் (13) உள்ளிட்ட நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் நிலவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகத்தால் ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version