கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சிவமூர்த்தி (44). சம்பவத்தன்று இவர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிவமூர்த்தி பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை திருப்பாலப்பந்தல் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version