மகரம் ராசி: வேதனைகள் தீர்ந்து, தன்னம்பிக்கை பெருகும் வாரம்!

மனதாலும் உடலாலும் நீங்கள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் தீரும் காலம் இது. உங்கள் ராசிக்கு உச்ச குருவின் சமசப்தம பார்வை கிடைப்பதால், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவை அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய நண்பர்களின் நட்பு உருவாகி, சந்ததி விருத்தியாகும். புத்திர சோகங்கள் அகன்று, வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

காதலுக்கு ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நிகழும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சகோதரர்களின் பங்களிப்பு தொழிலில் அதிகமாக இருக்கும். சிலருக்கு தாய்மாமன் மூலம் தொழிலுக்கு உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும்.

இந்த வாரத்தில் பிரதோஷ நாளன்று கரும்புச்சாறு அபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version