கேரளாவில் புதிய முதல்வர்: மே 18-ல் சதீசன் பதவியேற்பு!

கேரளாவில் ஆட்சி மாற்றம்! காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வி.டி. சதீசன் புதிய முதலமைச்சராக மே 18 ஆம் தேதி பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இல்லத்திற்குச் சென்ற வி.டி. சதீசன், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள். மே 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெறும்' என்று தெரிவித்தார். மற்ற அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், இதுகுறித்த ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

உம்மன் சாண்டியின் மறைவு தனக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது ஆட்சியில் தானும் ஓர் அமைச்சராக இருந்திருக்க வேண்டும் என்றும் சதீசன் உருக்கமாகப் பேசினார். 'அதிகாரத்தில் இருக்கும்போது ஏழைகளை மறக்கக் கூடாது என்பதற்கு உம்மன் சாண்டியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் எனக்கு ஒரு பெரிய பாடம். அவரது நினைவுகள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று அவர் நெகிழ்ந்தார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து நேரம் கேட்டு சந்திக்க இருப்பதாகவும் சதீசன் தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version