MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு முறைகேடு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை வாபஸ் பெற்றது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு முறைகேடு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை வாபஸ் பெற்றது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு முறைகேடு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை வாபஸ் பெற்றது

தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை வாபஸ் பெற்றது

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 6:54 மணி
Fernandez
Share
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்த அறிவிப்பு
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வாபஸ் பெற்றது.
SHARE

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் போன்ற முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு விவகாரத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த இந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கையை மையமாக வைத்து, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர்.

இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு பேரணியை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர். போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மத்திய அரசின் மீது அழுத்தம் கூடியது.

தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது போராட்டக்காரர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்பட்டது. இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் சிஜேபி கட்சியினர் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு ரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து, சிஜேபியின் பிற முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மத்திய அமைச்சர்கள் மற்றும் சிஜேபியினர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அதில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில், நாடு முழுவதும் நடைபெறும் மாணவர் போராட்டங்களை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நான்கு வாரங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறுகையில், 'நாங்கள் அரசாங்கக் குழுவினருடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த எங்கள் போராட்டத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முதலாவதாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இரண்டாவதாக, போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படக்கூடாது. எங்களின் மூன்றாவது கோரிக்கை, நீட் தேர்வு நடத்தப்படாததால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது. சற்று முன்புதான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் எங்கள் முதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது' என்றார்.

அஷுதோஷ் ரங்கா மேலும் கூறுகையில், 'கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே, போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை (ஜூலை 26ம் தேதி) நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் நாளை மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dharmendra PradhanKarappan Poochi Janatha PartyNEET Examகரப்பான் பூச்சி ஜனதா கட்சிதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுமாணவர் போராட்டம்ஜந்தர் மந்தர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டெல்லியில் விபத்துக்குள்ளான கார் மற்றும் திறந்த சாக்கடை கால்வாய் டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு
Next Article நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ முதல் பாடல் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையை வெளிப்படுத்தும்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு

டெல்லியில் வழுக்கலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஜூலை 25, 2026

டெல்லி போராட்டம் வாபஸ்: மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றது சிஜேபி!

டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

ஜூலை 25, 2026

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் திப்கே, மேலும் மூன்று…

ஜூலை 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு

தமிழக அரசு ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர்…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பூரில் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

திருப்பூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய தண்ணீர் மற்றும் மரபணு பிரச்சனைகளால் தரம் பாதிக்கப்பட்ட தக்காளிகள் குறைந்த விலைக்கு விற்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள, அரசு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு சேவையை அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் – காவல்துறை அறிவிப்பு

விழுப்புரம் நகரில் அடுத்த 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?