இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வாராந்திர விடுமுறைகளான ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் அத்துடன் சில முக்கிய பண்டிகைகளும் அடங்கும். சில விடுமுறை நாட்கள் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளான 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது. மேலும், ஜூலை 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமையிலும், ஜூலை 25ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகவும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம் தேதி எம்.எச்.ஐ.பி தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை 9ஆம் தேதி பெஹ்டியான் சிப்பித் திருவிழாவை முன்னிட்டு மேகாலயா மாநிலத்தில் வங்கிகள் செயல்படாது. ஜூலை 16ஆம் தேதி ஜெகநாத் பூரி கோயிலின் ரத யாத்திரையை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், ஜூலை 18ஆம் தேதி துருக்பா சே சே பண்டிகையை முன்னிட்டு சிக்கிம் மாநிலத்திலும், கர்ச்சி பூஜையை முன்னிட்டு திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர் ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு ஹரியானா மாநிலத்திலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் வங்கிச் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.