ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்

ஜனநாயகன் பட விவகாரம் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம் அளிக்கிறார்

ஜனநாயகன் திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இடம்பெற்றிருந்ததாக இயக்குநர் ஹெச். வினோத் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் அவர் சட்டமன்றத்திற்குள் வந்தார். படத்தில் அவர் செய்த சைகையை வேண்டுமானால் சட்டமன்றத்தில் செய்தார் என்று கூறலாம். 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு படத்தை வேண்டுமென்றே லீக் செய்திருந்தால், அதை கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அப்போது விஜய் சார் மத்தியிலும், மாநிலத்திலும் எந்த அதிகாரத்திலும் இல்லை. எனவே, விஜய் தரப்பே படத்தை லீக் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, வெறும் அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் விமர்சனம் மட்டுமே' என்று தெரிவித்தார்.

ஜனநாயகன் படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் வந்தன. படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவான விஜய் சாரும் படக்குழுவினருக்கு எப்போதும் துணையாக நின்றார்கள். 'என்ன ஆனாலும் நான் உங்களோடு நிற்பேன்' என்று விஜய் சாரிடம் தயாரிப்பாளர் உறுதியளித்தார். ஜனநாயகன் பட பிரச்சனைகளுக்கு விஜய் பேசியிருந்தால், அதையும் விமர்சித்திருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜனநாயகன் படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்தது வருத்தமளிப்பதாகவும் இயக்குநர் ஹெச். வினோத் குறிப்பிட்டார். முதலில் 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக முறையிட தங்களுக்கு போதிய அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version