கோவை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ள பிரபல எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா, பெண்களை மதிப்பதையும் ஆண்களின் உரிமைகளையும் பேசும் இந்தியாவின் முதல் 'மெனினிஸ்ட்' நூலை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தலைமுறையினர் செல்போன் மாயையிலிருந்து விடுபட்டு வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், பிரபல எழுத்தாளரும் தொழிலதிபருமான அக்ஷய் ஷர்மா தனது 5-வது படைப்பான 'மெனினிஸ்ட்' (Meninist) என்ற புதிய நூலை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நூல் 'பெண்களை மதித்தல்' மற்றும் 'ஆண்களின் உரிமைகள்' ஆகிய சமூகப் பார்வைகளை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகவும், இது வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்போன், கணினி போன்ற மாயைகளிலிருந்து வெளிவந்து, தங்களது அறிவையும் ஆளுமையையும் செதுக்கிக் கொள்ளப் புத்தகங்களை வாசிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாசிப்பின் மூலம் மட்டுமே ஒருவர் தனது அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள முடியும் என அவர் இன்றைய தலைமுறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில், கோயம்புத்தூர் புக் பெஸ்டிவல் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் இந்த மாபெரும் புத்தக திருவிழா, ஜூலை 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தக திருவிழாவில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பிறந்து கோவையில் 33 வருடங்களாக வசித்து வரும் அக்ஷய் ஷர்மா, இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை தளமான மார்க் ப்ளை பப்ளிஷர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக புத்தகங்கள் எழுதி வருகிறார்.
இவர் தனது மூன்று புத்தகங்களை எழுதி, ஆயிரக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு 'த ப்ளையிங் ட்ரீம்ஸ்' எனும் புத்தகத்தை எழுதி, அதனை நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளார். இந்தப் புத்தகம் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளது. இவரது இரண்டாவது புத்தகமாக, 'ரைட்டர் ஆன் அ மிஷின்' எனும் புத்தகத்தை 2024ல் எழுதி, இதனையும் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது புத்தகமான 'பாரத் ஆப் ஐகான்ஸ்' எனும் புத்தகத்தின் கருவை தொழிலதிபர் தீபக் ஜெயின் வழங்க, அதனை அக்ஷய் ஷர்மா எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், 4வது புத்தகமாக 'ப்ரம் அஷஸ் டூ கிங்' மற்றும் 5வது புத்தகமாக 'மெனினிஸ்டு' எனும் புத்தகங்களையும் தற்போது எழுதி வருகிறார். இந்த இரு புத்தகங்களும் அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவை புத்தக திருவிழாவில் அரங்கு அமைத்துள்ள இவர், தனது புத்தகங்களை காட்சிப்படுத்தியதுடன், தனது புத்தகங்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா கூறியதாவது: 'நாடு முழுவதும் தனது புத்தகங்கள் பல்வேறு அலைகளை புத்தக ப்ரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி' என்று தெரிவித்தார்.
'இன்றைய காலத்தில் புத்தகம் வாசிப்பது என்பது அரிதாக நடக்கின்ற நிகழ்வாக வருகின்றது. செல்போன், கனிணி, இன்டர்நெட் எனும் டிஜிட்டல் மாயையிலிருந்து பள்ளி மாணவிகள் முதல் இளைஞர்கள் வரை வெளிவர வேண்டும், அவர்கள் தங்கள் அறிவை செதுக்கிக் கொள்ள, புத்தகங்களை வாசிக்க முன்வர வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 'பெண்களை மதிப்பும் மற்றும் ஆண்களின் உரிமைகள்' கருப்பொருளால் சமூகப் பார்வைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'மெனினிஸ்ட்' என்கின்ற இந்த நூல் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா தெரிவித்துள்ளார்.

