MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: 3 வீரர்கள் நீக்கம், 2 வீரர்கள் வருகை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: 3 வீரர்கள் நீக்கம், 2 வீரர்கள் வருகை!
விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: 3 வீரர்கள் நீக்கம், 2 வீரர்கள் வருகை!

Admin
Last updated: ஜூன் 22, 2026 12:13 மணி
Admin
Share
SHARE

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த அணியில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். அதே சமயம், 3 வீரர்கள் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இளம் வீரர் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அபாரமாக விளையாடி, ஆட்டமிழக்காமல் சதம் அடித்த இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால், அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருந்த சீனியர் வீரர் விராட் கோலி, தற்போது முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். நட்சத்திர வீரர் கோலியின் வருகையால் மட்டுமே, நல்ல ஃபார்மில் இருந்தும் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது. மற்றொருபுறம், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும், தங்களது திறமையை நிரூபிக்க தவறியதால் இவர்களின் நீக்கம் எதிர்பார்க்கப்பட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு பதிலாக அக்சர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்சர் படேல் மீண்டும் ஒருநாள் அணியில் இணைந்துள்ளார். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 14 அன்று பர்மிங்காமில் தொடங்குகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricket NewsIND vs ENGஇந்திய அணிஒருநாள் தொடர்கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செயல்பாடு முக்கியம்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
Next Article நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததா? என்.டி.ஏ. விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

விளையாட்டு

2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா? ஐசிசி விதிமுறைகள் வெளியீடு!

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு குறைவு. தகுதி விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2 Min Read
விளையாட்டு

CSK தோல்விக்கு ருதுராஜ் காரணமா? பத்ரிநாத் கடும் விமர்சனம்!

சிஎஸ்கே அணி லக்னோவிடம் தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த ஒரு முடிவு தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்? சூர்யகுமாருக்கு ஆப்பு ரெடி.. ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு

இந்திய டி20ஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் தலைமைப் பதவிக்கு தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. அவருக்குப் பதிலாக, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து

ராய்ப்பூர்: புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய டி20 அணியில் சேர்க்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஆதரவு தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?