ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அபார சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் இன்று (ஜூன் 6) தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன், 13 பவுண்டரிகள் அடித்து 81 ரன்கள் எடுத்து அசத்தினார். கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் கே.எல். ராகுல் 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், 143 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ராகுல் ஆட்டமிழந்த பிறகு, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உடன் இணைந்த கில், 50-வது டெஸ்டில் விளையாடும் பண்ட், 70 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. கில் மற்றும் பண்ட் ஜோடி 121 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சாஃபி 2 விக்கெட்டுகளையும், ஜியாவுர் ரஹ்மான் ஷரிஃபி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரஷீத் கான் இல்லாத ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.