“தென்னிந்திய நடிப்பு யுக்திகளைக் கற்க ஆர்வமாக உள்ளேன்” – சாரா அலிகான் பேட்டி

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சயீப் அலிகானின் மகளான சாரா அலிகான், தனது தந்தையின் அடையாளத்துடன் திரையுலகில் அடியெடுத்து வைத்து பிரபலமானார். இந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர், 'கேதார்நாத்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். குறிப்பாக, தனுஷுடன் இணைந்து நடித்த 'அத்ராங்கி ரே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்தியத் திரையுலகம் குறித்து சாரா அலிகான் பேசுகையில், "பாலிவுட் சினிமா எனக்கு எல்லாமே. எனது புகழும் பெருமையும் இங்கிருந்துதான் கிடைத்தன. அதே சமயம், ஒரு நடிகையாகப் பிற மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. குறிப்பாக, தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கவும், அங்குள்ள நடிப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் விரும்புகிறேன். இந்திய சினிமாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தென்னிந்திய சினிமா மீது எனக்குத் தனி ஈர்ப்பு உண்டு" என்று கூறினார். சாரா அலிகானின் இந்தக் கருத்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version