தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160-ம், கிராமுக்கு ரூ.270-ம் குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது. ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இந்த விலை வீழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் காலை நிலவரத்திலிருந்து உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த வெள்ளி, பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிற்பகலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு, நகை வாங்க திட்டமிட்டிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version