சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா – ஈரான் இடையேயான தாக்குதல்கள் காரணமாக ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து, அதன் மீதான முதலீடுகள் அதிகரித்தன. இது தங்கத்தின் விலையில் படிப்படியாக குறைய வழிவகுத்தது.
கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிச்சயமற்ற தன்மையிலேயே நீடிக்கிறது.
சென்னையில், ஜூலை மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியது. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 24) தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,160 குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.270 குறைந்து, ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி விலையிலும் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து, ரூ.2,40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு நகை வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
