தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை குறைவு குறித்த செய்தி

உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, தங்கத்தின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவை நோக்கி சென்றது.

இந்த நிலை ஓரிரு வாரங்களில் சீரடையும் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவை சந்தித்தன.

நேற்று (ஜூலை 14) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. இதன் அடிப்படையில், நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,440 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,180 ஆகவும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று (ஜூலை 16) தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.

நேற்று சவரனுக்கு ₹240 உயர்ந்த நிலையில், இன்று அதே அளவு விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இது நகை பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே தேதியில், அதாவது 2025 ஜூலை 16 அன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.72,800-க்கும், ஒரு கிராம் ரூ.9,100-க்கும் விற்பனையானது. மேலும், 2025 ஜூலை 16 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.124-க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விலை ஏற்ற இறக்கங்கள் சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இருப்பினும், இன்று ஏற்பட்டுள்ள விலை குறைவு நுகர்வோருக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version