MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!
தமிழ்நாடு

சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!

Admin
Last updated: June 30, 2026 7:26 am
Admin
Share
SHARE

ராமநாதபுரம் அருகே சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த அத்தையே இந்த கொடூரத்தை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலம் நெஞ்சை பதறவைப்பதாக அமைந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறையை கொண்டாட ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த ஜூன் 28 அதிகாலை, மின்வெட்டு ஏற்பட்டிருந்தபோது, பாட்டியுடன் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடிய நிலையில், அருகிலிருந்த வீட்டின் உறைகிணற்றில் சிறுமியின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் சொந்த அத்தையான சபரியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவரை காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், அதேசமயம் கணவரின் அக்காள் மகளான சாய் தீப்தி மீது அனைவரும் அதிக பாசம் காட்டுவதாகவும், இதனால் தனக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டதாகவும் சபரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த பொறாமை காரணமாக, அதிகாலையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியை தூக்கிச் சென்று அருகிலிருந்த கிணற்றில் உயிருடன் வீசிக் கொன்றதாக சபரியா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களுக்கிடையேயான பொறாமை காரணமாக சொந்த அத்தையே சிறுமியை கொடூரமாக கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகொலை வழக்குசிறுமி கொலைசொந்த அத்தைராமநாதபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!
Next Article காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும்…

June 30, 2026

பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!

நாளை முதல் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் சேவைகளுக்கான…

June 30, 2026

பிரதமர் மோடி இன்று மத்திய செயலாளர்களுடன் ஆலோசனை

சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு செயலாளர்களுடன்…

June 30, 2026

காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக…

June 30, 2026

கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது வழக்கு பதிவு

வீட்டு சமையல்காரரை அடித்து துன்புறுத்தியதாக கிரிக்கெட் வீரர்…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சர்வதேச செவிலியர் தின வாழ்த்து: அண்ணாமலை பதிவு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: 2 பேருக்கு நீதிமன்ற காவல் – நடந்தது என்ன?

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மோகன் ராஜ் 27ஆம்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல்…

1 Min Read

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ரத்து அறிவிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்

வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?