MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காசா: உயிரிழப்பு 72,819 ஆனது; 70% ஆக்கிரமிப்புக்கு நேதன்யாகு உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காசா: உயிரிழப்பு 72,819 ஆனது; 70% ஆக்கிரமிப்புக்கு நேதன்யாகு உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - காசா: உயிரிழப்பு 72,819 ஆனது; 70% ஆக்கிரமிப்புக்கு நேதன்யாகு உத்தரவு

உலகம்

காசா: உயிரிழப்பு 72,819 ஆனது; 70% ஆக்கிரமிப்புக்கு நேதன்யாகு உத்தரவு

Fernandez
Last updated: மே 29, 2026 9:10 காலை
Fernandez
Share
SHARE

கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 172,894 பேர் காயமடைந்துள்ளனர். காசா மருத்துவ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்தும், 39 பேர் காயமடைந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மே 28) காசாவில் அகதிகளாக தங்கியிருந்த கட்டிடங்கள் மற்றும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 11 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 922 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 2,786 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், 'ஹமாஸ் அமைப்பை நாங்கள் கடுமையாக நெருக்கி வருகிறோம். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி 50 சதவீதப் பகுதியைக் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது 60 சதவீதப் பகுதியை எங்கள் வசம் கொண்டு வந்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

'என்னுடைய தற்போதைய நேரடி உத்தரவு என்னவென்றால், இந்த எல்லையை 70 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும்' என்றும் நேதன்யாகு கூறினார். மாநாட்டில் பங்கேற்ற மேற்கு கரை ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்கள் '100 சதவீத காசாவையும் கைப்பற்றுங்கள்' என முழக்கமிட்டனர்.

இதற்கு பதிலளித்த நேதன்யாகு, 'வரிசைப்படியாக செல்வோம், முதலில் 70 சதவீதத்தை முடிப்போம்' என்று குறிப்பிட்டார். இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதல்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:GazaIsraelஇஸ்ரேல்உயிரிழப்புகாசாநேதன்யாகுபோர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுகவில் அதிரடி: பழைய பொறுப்புகளை விளம்பரப்படுத்த வேண்டாம் – எடப்பாடி உத்தரவு
Next Article லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை: 16 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

உலகம்

இம்ரான் கான் கட்சி தலைவர்களுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
உலகம்

மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24…

1 Min Read
உலகம்

அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்க விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு மோடி அழைப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபரை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அழைத்துள்ளார். இது இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?