MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

இந்தியா

தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

Admin
Last updated: மே 17, 2026 7:29 மணி
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளையே கிணற்றில் தள்ளி கொலை செய்து உடலை புதைத்த கொடூர தந்தையின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூரு மாவட்டம் நிம்ப மரதஹல்லி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவருக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். அவரது திருமணத்தை, மனைவியின் உறவினர் ஒருவருடன், அவர் 18 வயது ஆனதும் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. திருமணத்திற்கான துணிகள், தாலி போன்றவையும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன. இந்த பிரச்சனை முற்றிய நிலையில், திம்மராயப்பா தனது மகளையே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, திம்மராயப்பா தனது மகளை கிணறு அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, மகளை வலுக்கட்டாயமாக கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் விழுந்த மகள், 'காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியபோதும், இரக்கமின்றி கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு, மகளின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று, யாரும் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, வீட்டில் சகஜமாக இருந்துள்ளார்.

மாலை 6:30 மணியளவில் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய திம்மராயப்பாவின் மனைவி, வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, திம்மராயப்பாவும் மனைவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் நுணுக்கமான விசாரணையில் திம்மராயப்பா சிக்கியுள்ளார். விசாரணையில், மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால், அவரை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karnataka NewsMurderTamil Nadu Crimeகொலைதும்கூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!
Next Article சோழர் பெருமை: நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் – மோடி நெகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு மாணவர்களுக்காக காத்திருந்த பிரதமர் மோடி

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக பிரதமர் மோடி விமான நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.…

1 Min Read
இந்தியா

20,000 டன் LPG உடன் ஹார்முஸ் கடந்து வந்த Symi கப்பல்!

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில், 20,000 டன் LPG உடன் Symi கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்துள்ளது.

1 Min Read
இந்தியா

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்கிறார். காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?