MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
தமிழ்நாடு

ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

Admin
Last updated: June 25, 2026 10:05 pm
Admin
Share
SHARE

நடப்பு 2026 ஆம் ஆண்டு குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 2026-2027ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், குறுவை பருவத்தில் மாநிலத்தின் மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார்/குறுவை/சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை 'நெற்பயிர்' பயிரிடப்பட்டுள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை இன்று (25/06/2026) முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2026 ஆகும். இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் 2026 ஜூலை 31 ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன. எனவே, கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள 'விவசாயிகள் கார்னர்' வாயிலாகவும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி 31.07.2026. எக்காரணத்திற்காகவும் இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crop InsuranceTamil Naduதமிழ்நாடுபயிர் காப்பீடுவிவசாயிகள்வேளாண்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article என்எல்சி பங்குகள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Next Article பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது குறித்து அமைச்சர்…

2 Min Read
தமிழ்நாடு

மருத்துவமனையில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தவெகவினர் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வந்த ஆம்புலன்ஸ் பல…

1 Min Read
தமிழ்நாடு

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்

திண்டுக்கல்லைச் சேர்ந்த சாம்ராட் என்ற இளைஞர், அமெரிக்காவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாங்காவை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம்…

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?