கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சுமார் 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு தவெக அளித்த வாக்குறுதிகளுக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இந்த சூழலில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் தற்போது அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயின் இந்த உத்தரவின் மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் வரையும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் ரூ 5932.23 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இது விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கடன் தள்ளுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.