MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

லைஃப் ஸ்டைல்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

Admin
Last updated: மே 9, 2026 6:56 காலை
Admin
Share
SHARE

* கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் ஒரு பாடத்தில் மாணவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவர் அங்குள்ள மாந்தோப்பில் இருந்த மாமரத்தில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவருடைய 16 வயது மகள் பிளஸ்-2 தேர்வில் வரலாறு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி அங்குள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது 16 வயது மகன் தமிழ். ஆங்கிலம், வணிகவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* வேலூர் காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது இளைய மகன் பிளஸ்-2 தேர்வு முடிவில் 600-க்கு 372 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக மனவேதனையோடு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

* திருப்பூர் மாவட்டம் சாணார்பாளையம் முத்துச்சாமி தோட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது 17 வயது மகள், 600-க்கு 397 மதிப்பெண்கள் கிடைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் குறைவான மதிப்பெண்களே கிடைத்து இருப்பதாகவும், இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று தனது குடும்பத்தினரிடம் மனவேதனையுடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மாணவிக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், தோட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த மாணவி, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த காலத்து குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த அழுத்தம் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்கு கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு மன ஆறுதலை கொடுங்கள்.

‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள். இதுக்கு மேலயும் வாழ்க்கை இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.

பிள்ளைளுக்கான பிரச்சனைகளை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: க்ருனால் பாண்டியா காலரைப் பிடித்த பூரன்.. ஓடி வந்த லக்னோ கோச்.. என்ன நடந்தது?
Next Article IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் கிடையாது..இந்தியாவின் புதிய டி20 கேப்டன் இந்த அதிரடி வீரர் நியமிக்க வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: சிறப்பு திருத்தப் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர…

ஆகஸ்ட் 9, 2026

ஜென் ஸி-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்: தர்மேந்திர பிரதான்

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

கேஸ் பர்னரை சுத்தம் செய்யும் கை
லைஃப் ஸ்டைல்

கேஸ் பர்னரை சுத்தம் செய்ய 8 எளிய டிப்ஸ்

கேஸ் பர்னரை சுத்தம் செய்ய 8 எளிய டிப்ஸ்: தினசரி சமையலுக்குப் பிறகு பர்னர் மீது சிதறிய எண்ணெய் மற்றும் உணவுத் துகள்களை விரைவாகத் துடைத்துவிடுவது, கெட்டியான…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

துலாம் ராசிக்கு இன்றைய பலன்கள்: 7 ஜூன் 2026

துலாம் ராசிக்கு 7 ஜூன் 2026 அன்று நன்மைகள் நடைபெறும். பொருளாதார நிலை உயரும், அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உண்டு.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள்: மழையால் டாஸ் தாமதம்

தர்மசாலாவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. டாஸ் போடும் நிகழ்வு தாமதமாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து விலகும் விஜயதாரணி: த.வெ.க.வில் இணைகிறார்!

பாஜகவில் அதிருப்தி அடைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, கட்சிப் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தியடைந்து, பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?