பயிர்க்கடன் தள்ளுபடி: த.வெ.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஆர்ப்பாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மேகதாது அணை விவகாரத்தில் த.வெ.க. அரசு மெத்தனம் காட்டுவதாகவும், விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சிப்பதாகவும் கூறி, அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 14-ந்தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் த.வெ.க. கூட்டணி அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறி, இதற்கு முன்பும் அதிமுக மற்றும் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்படவில்லை.

எனவே, விவசாயிகளின் நலனைப் புறக்கணித்து, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி, காவிரியில் நமக்குரிய நீரைப் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. அரசை கண்டித்தும், வருகின்ற 14.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க உள்ளார். சென்னை மாவட்டம் நீங்கலாக, மற்ற வருவாய் மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version