MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தி.மு.க ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு: டி.ஆர்.பி. ராஜா பதில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தி.மு.க ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு: டி.ஆர்.பி. ராஜா பதில்
தமிழ்நாடு

தி.மு.க ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு: டி.ஆர்.பி. ராஜா பதில்

Admin
Last updated: June 24, 2026 7:13 am
Admin
Share
SHARE

முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் 3 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தவெக அரசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவெக அரசு கூறுவது பச்சை பொய் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு பேசலாம் என்றும் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, தவெக அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் திறமையின்மையை மறைக்க பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் 3 கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறும் அரசின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும், பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதலற்ற பச்சைப் பொய் எனவும் அவர் விமர்சித்துள்ளார். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை, திட்டமிட்டு ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே குற்றஞ்சாட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் திமுகவை குற்றம்சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு தவெக சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது என்றும் டி.ஆர்.பி. ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்னிடம் உள்ள புள்ளிவிவரங்களுடன் தவெக அரசின் பொய்களுக்கு பதிலளிக்க முடியும் என்றும், ஆனால் எதையும் புரிந்துகொள்ளும் திறனற்ற அரசு அது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாக முதலீடுகள் வந்த நிலையில், அது 12.6 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றும், இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு தொடர்ந்து இருந்திருந்தால், இந்த முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும் என்றும், தற்போதைய அரசு இதில் பாதியாவது செய்து காட்டட்டும் என டி.ஆர்.பி. ராஜா சவால் விடுத்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsடி.ஆர்.பி. ராஜாதமிழ்நாடு முதலீடுதவெக அரசுதிமுக ஆட்சிபொருளாதாரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குடற்புழுக்களை இயற்கையாக விரட்டும் எளிய வழிகள்!
Next Article தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பேன்சி நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடகாவில் ஒரு வாலிபர் கைது…

June 24, 2026

போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…

June 24, 2026

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா: ஜனாதிபதி ஏற்பு

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது…

June 24, 2026

மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய…

June 24, 2026

செருப்பால் தாக்கப்பட்ட சிறுவர்கள்: பள்ளி மைதானத்தில் கொடூரம்

பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனை கட்டிவைத்து…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெகவில் அதிமுகவினர்: செங்கோட்டையன் விளக்கம்

அதிமுக தலைமை மீது அதிருப்தி கொண்ட பல தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

பூஜை பொருட்கள் கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்: அமைச்சர் ரமேஷ்

பூஜை பொருட்கள் கடைகளில் விலைப்பட்டியலை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் தவெகவினர் நுழைய தடை: மேயர் பிரியா அதிரடி

சென்னையில் பள்ளி வளாகங்களுக்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி எந்தப் பொருளையும் மாணவர்களுக்கு வழங்கக்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?