விஜய் பட ரசிகன் நான்; ‘லவ் டுடே’ 6 முறை பார்த்தேன் – திமுக எம்.எல்.ஏ பேச்சு

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்

பெரியவர்கள் 'நல்ல பெயர்' எடுக்க வேண்டும் என்று கூறியதை, தற்போதைய ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் 'நல்ல பெயர்களை' நீக்கி, அவற்றுக்குப் பெயர் மாற்றி புதிய திட்டங்களாக அறிவித்துள்ளதாக ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், 'நானும் விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். மாணவர் பருவத்தில் முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ‘லவ் டுடே’ படத்தை 6 முறை பார்த்திருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'முதல்வர் மேடையில் பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசின் இந்த பட்ஜெட் ஜீரோ பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை' என கடுமையாக சாடினார்.

மேலும், 'கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் 51ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. தற்போது 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி இந்தாண்டு 56 ஆயிரம் கோடி வருவாய் வரும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.

'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மூலம் 30 ஆயிரம் ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12,600 ஊராட்சிகள் இருக்கும் போது ஒரு ஊராட்சிக்கு இரண்டு ஆடுகள் வழங்குவது எப்படி வெற்றி திட்டமாகும். இது வெத்து அறிவிப்பு திட்டம். ஒரு ஊராட்சியில் 2 பேருக்கு மட்டும் ஆடு கொடுப்பது வெற்றி திட்டமா? வெற்றி விளம்பர திட்டமா? வெற்றி அரசு வெற்றி அரசு என்று தவெக சொல்வது மக்களுக்கு வெட்டி அரசு வெட்டி அரசு என கேட்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'விவசாயிகளை தவெக அரசு வஞ்சித்துவிட்டது. உயர்க்கல்வித்துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்' என்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தனது உரையில் குற்றம்சாட்டினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version