MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவின் பலமே தொண்டர்கள்தான் – ஆர்.எஸ். பாரதி புகழாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவின் பலமே தொண்டர்கள்தான் – ஆர்.எஸ். பாரதி புகழாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவின் பலமே தொண்டர்கள்தான் – ஆர்.எஸ். பாரதி புகழாரம்!

தமிழ்நாடு

திமுகவின் பலமே தொண்டர்கள்தான் – ஆர்.எஸ். பாரதி புகழாரம்!

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 7:24 காலை
Fernandez
Share
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
SHARE

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், தி.மு.க ராயபுரம் முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த முக்கிய நிகழ்வில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, 'ஆட்சியில் இருந்தபோது எப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதோ, அதேபோல் தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாங்கள் தேர்தலில் தோற்றது போலவே தெரியவில்லை' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், 'இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை கலைந்து செல்லாமல் தொண்டர்கள் நிற்பதுதான் தி.மு.க-வின் பலம். 76 ஆண்டுகளாக இந்தக் கட்சி நிலைத்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள்தான்' என புகழாரம் சூட்டினார்.

தி.மு.க., எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது குறித்து மறைமுகமாக பேசிய ஆர்.எஸ். பாரதி, 'தற்போது தி.மு.க-வினர்கள் மீது வழக்குகளை போடுகிறார்கள்; கைது செய்திகிறார்கள். தி.மு.க-வுக்கு இதெல்லாம் புதிதல்ல. பழக்கப்பட்ட ஒன்றுதான். சிறைச்சாலையை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் எங்களுக்கு எந்த ஆபத்தும், கவலையும் இல்லை' எனத் தெரிவித்தார்.

ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திங்கட்கிழமை (ஜூலை 20) மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், ஆர்.எஸ். பாரதி இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பெரும் கோட்டை. அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் அந்தக் கோட்டையை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றன. வெற்றியும், தோல்வியும் இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்த்ததில்லை' என்று கூறினார்.

'திமுகவை அசைத்துப் பார்ப்பேன், ஆட்டிப் பார்ப்பேன், இல்லாமல் செய்வேன் என்று கூறியவர்கள் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்கள் இருப்பதால் திமுக இன்னும் நூறாண்டுகள் சிறப்பாக செயல்படும்' என டி.கே.எஸ். இளங்கோவன் தனது உரையை நிறைவு செய்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKRayapuramRS Bharathiஆர்.எஸ்.பாரதிகடற்பீஸ் பழனிடி.கே.எஸ். இளங்கோவன்திமுகராயபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கைது செய்யப்பட்ட தொழிலாளி 25 பவுன் நகை திருட்டு நாடகம்: தொழிலாளி கைது
Next Article தமிழகத்தில் அரிசி விலை உயர்வு குறித்த செய்தி தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: பொன்னி கிலோ ரூ.80 ஆனது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போலி வங்கி செயலி உருவாக்கிய இளைஞர் கைது

ஏஐ மூலம் போலி வங்கி செயலி: 18 வயது இளைஞர் கைது

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வங்கி செயலிகளை உருவாக்கிய 18 வயது இளைஞர்…

ஜூலை 23, 2026

சிக்கிம் சுரங்கப் பாதை விபத்து: உயிரிழப்பு 20 ஆக உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் நீர்மின்சார திட்ட சுரங்கப் பாதை…

ஜூலை 23, 2026

பசுமை பட்டாசு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்…

ஜூலை 23, 2026

அசாம் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு – 16 மாவட்டங்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக 16 மாவட்டங்களில்…

ஜூலை 23, 2026

பாஜக பெண் நிர்வாகிக்கு துறவிகள் அமைப்பில் முக்கிய பதவி

பாஜகவின் பெண் நிர்வாகி முனைவர் உதிதா தியாகி,…

ஜூலை 23, 2026

You Might Also Like

அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர்
தமிழ்நாடு

சென்னையில் அண்ணாமலையின் அடுத்த மாநாடு: ஆகஸ்ட் 16-ல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

‘வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, சென்னையில் ஆகஸ்ட் 16-ல் ‘குற்றச் சூழல் விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அனுமதி கோரி காவல்…

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் அதிரடி: ஒன்றிய அரசு இனி இந்திய அரசு!

தமிழக முதலமைச்சர் விஜய், இனி மத்திய அரசை 'இந்திய அரசு' என்று குறிப்பிடுவார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
தமிழ்நாடு

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ்: மன்னிப்பு கோர அவகாசம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தன்னை பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் மன்னிப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?