MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம்: டிடிவி தினகரன் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம்: டிடிவி தினகரன் விமர்சனம்

லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம்: டிடிவி தினகரன் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 18, 2026 6:21 மணி
Admin
Share
SHARE

தவெக அரசு தயாரித்த ஆளுநரின் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மாநில உரிமை, பெண்கள் நலன், சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் சிறுபான்மையினர் நலன், கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரை அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்' என்ற அண்ணாவின் வரிகளுடன் தொடங்கிய ஆளுநர் உரையில், பொதுத் தொடர்பு மொழி குறித்த வாதத்தை மறைத்து, இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தடையை ஏற்படுத்தும் என தினகரன் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக் கொள்கையை ஆராயாமல் எதிர்ப்பதும் கேள்விகுரியாக்கியுள்ளது. மேலும், மாணவர்களின் எதிர்கால நலன், தமிழை வழக்காடு மொழியாக்குதல், சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைத்தல், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு, நதிகள் இணைப்பு போன்ற முக்கிய விஷயங்களில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கடந்த கால ஆளுநர் உரையின் விவரங்களை 'Cut, Copy, Paste' செய்தது வழக்கமான சம்பிரதாய நடவடிக்கை என விமர்சித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதையும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதையும் கண்டிக்க முடியாமல் இருப்பதன் மூலம், மாநில உரிமையையும் விவசாயிகளின் நலனையும் தாண்டி, காங்கிரஸ் கட்சி மீதான தவெகவின் விசுவாசம் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதாக தினகரன் குற்றம் சாட்டினார். கொத்துக் கொத்தாக நடக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கும் நிலையில், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்' என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூக மக்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைத்திடவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தின் அடிப்படையில், தவெக அரசு சமூகநீதி சர்வே நடத்த முன்வந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக தினகரன் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், ஆறு சிலிண்டர், தாலிக்குத் தங்கம், பட்டுச் சேலை, பெண்கள் நீதிமன்றங்கள், பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் தங்க மோதிரத் திட்டம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமோ செயல்திட்டமோ ஆளுநர் அறிக்கையில் இடம்பெறாமல் போனது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை தந்திருப்பதாகக் கூறினார். தமிழகத்தின் நிதிநிலையைச் சீரமைத்த பின்னர்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்றால், தேர்தலுக்கு முன்பே மக்களை ஏமாற்றும் நோக்கில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, 1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நிகழ்த்திய ஆட்சி மாற்றத்தை வெறும் ஒப்பீட்டளவில் பேசாமல், அந்த இருபெரும் தலைவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும், தமிழக மக்களுக்குக் கொடுத்த நல்லாட்சியையும் பின்பற்றிட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு அறிவுறுத்தும் இந்நேரத்தில், இன்றைய ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமமுகஆளுநர் உரைடிடிவி தினகரன்தமிழ்நாடு அரசியல்தவெக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கவர்னர் உரைக்கு வைகோ பாராட்டு: ‘வெற்றித் தமிழகம்’ திட்டங்கள் சிறப்பு
Next Article விஜய் அதிர்ச்சியில் இருக்கிறார்: நயினார் நாகேந்திரன் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

3 வயது குழந்தை வன்கொடுமை: தமிழக அரசை விமர்சித்த கனிமொழி

3 வயது குழந்தை வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். குற்றவாளிகளுக்கு பயம் இல்லை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

கன்னி ராசிக்கு யோகமான நாள் – 7 ஜூன் 2026

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாள். நேற்றைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி பேராசிரியர் கொலை: சொத்து தகராறில் மேற்கு வங்க தம்பதி கைது

டெல்லியில் வீடு விற்பனை தகராறில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?