மவுனி ராய் விவாகரத்து? கணவருடன் கருத்து வேறுபாடு – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இந்தி நடிகை மவுனி ராய், கணவர் சூரஜ் நம்பியாருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நாகினி' சீரியல் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்ற மவுனி ராய், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, கேரளாவைச் சேர்ந்தவரும் துபாயில் தொழில் அதிபருமான சூரஜ் நம்பியாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகத் தோன்றினாலும், சமீப காலமாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில், தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வதை நிறுத்தியது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மவுனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். அதேபோல், சூரஜ் நம்பியாரும் மவுனியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகளால், இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version