சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டாஸ் நிகழ்வின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சிஎஸ்கே தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசிப் போட்டி இதுவாகும். சமீபத்தில் தோனி வலைப்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், அவர் நிச்சயம் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
டாஸ் நிகழ்வின் போது பேசிய ருதுராஜ், 'தோனி இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை. அதனால் இன்று விளையாடவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது' என்று நம்பிக்கை அளித்தார். தற்போது 12 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே அணிக்கு, பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஒருவேளை சிஎஸ்கே வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் தோனி களம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 மிகவும் வலுவாகவும் சமநிலையாகவும் உள்ளது. கடந்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றிருப்பதால், தோனி விளையாடினால் அணியின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுமா என்ற விவாதமும் கிரிக்கெட் நிபுணர்களிடையே நிலவியது. ருதுராஜ் குறிப்பிட்டது போல, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து தோனியின் வருகை இறுதி செய்யப்படும்.