புதுடெல்லியில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்றாவது நாளாக மாணவர்கள் ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட மெட்ரோ நிலையங்களின் பட்டியல்: லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம் (Supreme Court), சேவா தீர்த்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், ஐடிஓ (ITO), டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம்.
டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்: போராட்டம் தீவிரம்
