MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரேசன் கடைகளில் தரமான பொருட்கள்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரேசன் கடைகளில் தரமான பொருட்கள்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தரமான பொருட்கள்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்

Admin
Last updated: ஜூன் 29, 2026 8:04 மணி
Admin
Share
SHARE

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, ரேசன் கடைகளில் எடை குறைபாடு இல்லாமல் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் குறித்து கல்வித்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறை சார்பில் போதை மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ஆட்சியர்கள் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறைகள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கோயில் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பெரும்பாலான குற்றங்களுக்கு நில தகராறுகளே முதன்மைக் காரணம் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நில வழக்கு தீர்வு குழுவை 2 வார இடைவெளியில் கூட்ட வேண்டும். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் மற்றும் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது. சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். 'மக்களிடம் செல்வதே' நமது தாரக மந்திரம் என அவர் குறிப்பிட்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உணவுப் பொருட்கள்பெண்கள் பாதுகாப்புமாவட்ட ஆட்சியர்கள் மாநாடுமுதல்வர் விஜய்ரேசன் கடை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜூனியர் என்டிஆர் – திரி விக்ரம் கூட்டணி மீண்டும் இணைந்தது!
Next Article குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் தவெகவினர் நுழைய தடை: மேயர் பிரியா அதிரடி

சென்னையில் பள்ளி வளாகங்களுக்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி எந்தப் பொருளையும் மாணவர்களுக்கு வழங்கக்…

1 Min Read
தமிழ்நாடு

தாம்பரம் – போடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விரைவில் தொடங்கும் என அறிவிப்பு.

0 Min Read
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க.வில் சேர வற்புறுத்தினர்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் கைது.

2 Min Read
தமிழ்நாடு

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் அமைச்சர் வீடியோ: டிடிவி தினகரன் கேள்வி

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் அமைச்சர் சம்பந்தப்பட்ட வீடியோ வெளியான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?