கர்நாடக மாநிலம் மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, முதல்வர் விஜய் காரை ஓட்டிச் சென்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியில், முதல்வருக்கு அருகில் இருந்த டம்ளரில் மதுபானம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், முதல்வர் விஜய் கர்நாடக மாநிலம் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பும் வழியில் அவர் காரை ஓட்டியபோது, அருகில் இருந்த ப்ளாஸ்டிக் டம்ளரில் ஐஸ் கட்டிகளுடன் ஒரு பானம் இருந்தது. இது குளிர்பானம் இல்லை என்றும், மதுபானம் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஒரு மாநிலத்தின் முதல்வர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒரு தரப்பினர் அவர் இறை வழிபாட்டிற்கு சென்றிருந்தபோது மது அருந்த மாட்டார் என்றும் வாதிடுகின்றனர். மற்றொரு தரப்பினர், அந்த டம்ளரில் இருப்பது மதுபானம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும், அது ஜூஸ் அல்லது வேறு பானமாகவும் இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'தனி மனித ஒழுக்கம்' குறித்து பாடம் எடுக்கும் முதல்வர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.