முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்தடை கூடாது: அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் நாளை பங்கேற்கும் மின்வாரிய நிகழ்வில் எவ்வித மின்தடையும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் விஜய் தலைமையில் 379 உதவியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவின் போது மின்சாரம் தடைபடாமல் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, கலைவாணர் அரங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version