சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது

தமிழகத்தில் அனல் காற்று வீசி மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் சதம் அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் இன்று அதிகபட்சமாக 103.46 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 9 மாவட்டங்களில் வெயில் சதமடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இருப்பினும், சில மாவட்டங்களில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் ஆகாரங்களை அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version