MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

தமிழ்நாடு

கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

Admin
Last updated: மே 28, 2026 11:08 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில், கோடை வெயிலின் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, உடல் வியர்வை மற்றும் இரத்த ஓட்டம் மூலம் அதிக வெப்பத்தை வெளியேற்றி தன்னை சீராக வைத்துக்கொள்ளும். இருப்பினும், கோடை வெப்பம் அதிகமாகும்போது உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும், வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் அளவுக்கு நீர் அருந்த வேண்டும். சூடான பானங்களைத் தவிர்த்து, மோர், உப்பு கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்றவற்றை அருந்தலாம். வெளியே செல்லும்போது தலையில் பருத்தி துணி, தொப்பி அல்லது குடை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம். வியர்வை எளிதில் வெளியேறக்கூடிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகலில் உடற்பயிற்சி செய்வதையும், தேவையில்லாமல் வெயிலில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூடி, இரவு நேரங்களில் காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது.

வெயிலில் வேலை செய்யும்போது தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று தண்ணீர், எலுமிச்சை சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், அதிக தாகம், கால் அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். யாரேனும் மயக்கமடைந்தால், உடனடியாக மருத்துவரை அழைத்து, அவர்களை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதித்து, கால் மற்றும் இடுப்பை உயர்த்தி, உடைகளை தளர்த்தி, ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தெளித்து, காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நல்வாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. இங்கு தேவையான மருந்துகளும், 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. மேலும், வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் பொதுமக்கள் மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களில் தங்கி கொள்ளலாம். இந்த முன்னேற்பாடுகள் மற்றும் மாநகராட்சி அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CorporationSummer Heatகோடை வெப்பம்சுகாதார அறிவுரைகள்சென்னை மாநகராட்சிவெப்ப பாதிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர், ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது
Next Article இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் வேண்டாம்: கீதா ஜீவன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை மாணவர்களுக்கு வழங்க உள்ள அடையாள அட்டையில் சாதி, மதம் இடம்பெறப் போவதாக வெளியான தகவல்களை தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வன்மையாக கண்டித்துள்ளார்.

1 Min Read
டி.டி.வி. தினகரன் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

மேகதாது அணை: கர்நாடக அரசு மீது வழக்கு தொடர முதலமைச்சர் விஜய்க்கு தினகரன் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டும் பணிகளை கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேற்கொள்வதாக குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு

ராமநாதபுரம் சிறுமி உயிரிழப்பு: குற்றவாளிகளுக்கு தண்டனை கோரி பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கவலை தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ்நாடு

ஸ்டாலின் நட்ட கல்வெட்டை அகற்றிய தவெக அரசு: திமுக பகிரங்க குற்றச்சாட்டு

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் அலகு கல்வெட்டை த.வெ.க அரசு அகற்றியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது அரசியல்…

3 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?