ரஜினியின் ஜெயிலர் 2: வெளியீட்டு தேதி மாற்றம் – புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன், அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி, ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மீண்டும் ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகிறது. முதல் பாகத்தைப் போலவே, இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் முக்கிய கெஸ்ட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பின்னணி வேலைகளிலும், வெளியீட்டு பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version