MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலியை கடத்தி சித்திரவதை செய்த இளைஞர் கைது: பிரேசில் அதிர்ச்சி சம்பவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலியை கடத்தி சித்திரவதை செய்த இளைஞர் கைது: பிரேசில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - காதலியை கடத்தி சித்திரவதை செய்த இளைஞர் கைது: பிரேசில் அதிர்ச்சி சம்பவம்

க்ரைம்

காதலியை கடத்தி சித்திரவதை செய்த இளைஞர் கைது: பிரேசில் அதிர்ச்சி சம்பவம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 25, 2026 8:41 மணி
Fernandez
Share
சித்திரவதை செய்யப்பட்ட பெண் மீட்கப்பட்ட காட்சி
சித்திரவதை செய்யப்பட்ட பெண் மீட்கப்பட்ட காட்சி
SHARE

பிரேசிலில், காதலை முறித்துக் கொண்ட முன்னாள் காதலியை கடத்திச் சென்று, அவரது கை, கால்கள் மற்றும் கழுத்தில் சங்கிலியால் கட்டி, கொடூரமாக சித்திரவதை செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதான எமிலியானே என்பவர், அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்பவரை காதலித்து வந்துள்ளார். திடீரென, அய்ல்டனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிடிக்காததால், எமிலியானே அவருடனான உறவை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அய்ல்டன், எமிலியாவை கடத்த திட்டமிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த எமிலியானேவை வழிமறித்த அய்ல்டன், அவரை காரில் கடத்திச் சென்று தனது வீட்டிற்கு அழைத்து வந்து சிறை வைத்துள்ளார். அங்கு, எமிலியானேவின் கை, கால்கள் மற்றும் கழுத்தில் சங்கிலியால் கட்டி, வாயில் துணியை அடைத்து, மூச்சுவிட முடியாத அளவுக்கு சித்திரவதை செய்துள்ளார்.

ஐந்து நாட்களுக்கு முன்பு எமிலியானே காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அய்ல்டன் எமிலியானேவை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அய்ல்டனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு, எமிலியானே கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்ட நிலையில் மெத்தையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது கைகள், கால்கள் மற்றும் கழுத்து ஆகியவை சங்கிலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அவரை சிறைப்பிடித்து வைக்க கைவிலங்குகளும் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எமிலியானே மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், அவரது அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்குக் கேட்காமல் தடுப்பதற்காக முகத்தில் முகமூடியும் வாய்க்கட்டும் இடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட எமிலியானே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் அவரது காதலன் அய்ல்டனை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:arrestBrazilKidnappingLoveTortureகடத்தல்காதல்கைதுசித்திரவதைபிரேசில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நாட்றம்பள்ளியில் பலூன் தொண்டையில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நாட்றம்பள்ளியில் பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
Next Article தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளிக்கிறது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி கங்கனா ரனாவத்

பாபா ராம்தேவ் பேச்சுக்கு கங்கனா ரனாவத் கண்டனம்

பாஜக எம்பி கங்கனா ரனாவத், பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்துக்கள்…

ஆகஸ்ட் 25, 2026

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களுக்கு…

ஆகஸ்ட் 25, 2026

பள்ளிகள் அருகே குளிர்பானம், துரித உணவுகளுக்கு தடை

பள்ளிகளுக்கு அருகில் 50 மீட்டர் சுற்றளவுக்குள் சிப்ஸ்,…

ஆகஸ்ட் 25, 2026

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரள மாணவி காசியா லிஸ் மெஜோவிற்கு மகுடம்

கேரள சட்ட மாணவி காசியா லிஸ் மெஜோ,…

ஆகஸ்ட் 25, 2026

கேரளாவில் தெரு நாய்கள் கருணைக்கொலை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

கேரளாவில், மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் குணப்படுத்த…

ஆகஸ்ட் 25, 2026

You Might Also Like

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்
இந்தியா

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
கோவில்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

கோவில்பட்டியில் முன்விரோதம்: வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
சினிமா

அனிருத் காதல் திருமணம்? ஸ்பெயினில் நவம்பரில் நிச்சயதார்த்தமா?

இசையமைப்பாளர் அனிருத், தொழில் அதிபர் ஒருவரின் மகளை காதலிப்பதாகவும், வரும் நவம்பரில் ஸ்பெயினில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் வெளியான தகவல் வைரலாகி வருகிறது.

1 Min Read
தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி மற்றும் கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் தொடர்பான செய்தி
தமிழ்நாடு

மனைவியின் கள்ளக்காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி – காதலன் கைது

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்தும், அது தொடர்ந்ததால் மனமுடைந்த தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?