MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்

தமிழ்நாடு

பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 10:54 காலை
Fernandez
Share
பிவண்டியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் மற்றும் மீட்புப் பணிகள்
பிவண்டியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - மீட்புப் பணிகள் தீவிரம்
SHARE

தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில், கனமழை காரணமாக 4 மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, சுமார் 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணை உயிருடன் மீட்டனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டு, அதனை உடனடியாக காலி செய்யுமாறு பிவாண்டி மாநகராட்சி ஏற்கனவே அங்கு வசித்து வந்தவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

மாநகராட்சியின் உத்தரவை ஏற்று பெரும்பாலானோர் அந்தக் குடியிருப்புகளை காலி செய்துவிட்ட நிலையில், தரைதளத்தில் சில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கட்டிடம் மிகவும் ஆபத்தானது என மாநகராட்சியால் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலி செய்ய உத்தரவிடப்பட்ட பிறகும், அந்தக் கட்டடத்திற்குள் பழுதுபார்க்கும் பணியை செய்ய அனுமதித்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எச்சரிக்கையையும் மீறி செயல்பட்டதன் விளைவாக இந்த துயரம் நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:6 Dead6 பேர் பலிBivandiBuilding Collapseகட்டிடம் இடிந்து விழுந்ததுதானேபிவண்டிமீட்புப் பணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதம் நீட் தேர்வு: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் – அரசு வாக்குறுதி காக்க வலியுறுத்தல்
Next Article சென்னையில் தங்கத்தின் விலை உயர்வு குறித்த செய்தி தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியல் குறித்த ஆய்வு

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர்…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று…

ஜூலை 31, 2026

வயநாடு நிலச்சரிவு: 2 ஆண்டுகள் நிறைவு – உறவினர்கள் அஞ்சலி

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த…

ஜூலை 31, 2026

You Might Also Like

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழ்நாடு

நில அபகரிப்பு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பரசன் மீது வழக்குப்பதிவு

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரில் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்

இந்திய அணுசக்தித் துறை, கல்பாக்கத்தில் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கியுள்ளது. இது தூய்மையான எரிசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

காங்கிரஸ் பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: மாணிக்கம் தாகூர்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் காங்கிரஸ் விமர்சனங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி. 'நம்மளே 4 எம்.எல்.ஏ ஜெயிக்குறதுக்கு அதிமுக-பாஜக கிட்ட கதை ஓட்டிட்டு…

2 Min Read
தமிழ்நாடு

பதவி கிடைக்காததால் த.வெ.க சென்றனர்: எஸ்.பி.வேலுமணி

கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்காததால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?