காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை

வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு திடீரென மாறியிருப்பது குறித்து, வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் அமைக்க முடியாது என்ற முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியதற்கான காரணத்தை அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நேற்று மாநிலங்களவையில் அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்புக்கு கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணைகள் போன்ற கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தார்" என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கிய விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று தனது பதிவின் இறுதியில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த திடீர் நிலைப்பாடு மாற்றம், தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version