விரைவில் அனைவரும் பேசுவோம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை, 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அரசியல் கட்சியாக போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், 'இது நம்ம இயக்கம்' அமைப்பில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை, கிட்டத்தட்ட 18.54 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல் சூழல், சட்டசபை நிகழ்வுகள், முதல்வர் விஜயின் சட்டசபை பேச்சு, மற்றும் 40 நாட்கள் தவெக ஆட்சியின் நிலை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அனைத்து கேள்விகளுக்கும் இலகுவாக பதிலளித்த அண்ணாமலை, 'நான் பேசுகிறேன். விரைவில் நம் எல்லோரும் உட்கார்ந்து பேசுவோம். அன்புக்கு நன்றி' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், அனைவரின் நலன்களையும் விசாரித்தபடி, புன்முறுவலுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version