MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

தமிழ்நாடு

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

Admin
Last updated: மே 17, 2026 10:29 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்திய தேர்தலில் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உடன்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேச நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம் இருந்தால் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இருவரும் திருச்செந்தூரில் போட்டி போட்டு பார்க்கலாம். இது எந்த ஊர் தெரியுமா? எந்த வகையிலும் எவரையும் வீழ்த்திவிடுவோம்" என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம் என்றும் அவர் பேசினார். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல் அமைச்சராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க பார்க்கிறார் என்றும், லாட்டரியில் கொள்ளையடிக்கும் பாவி ஆதவ் அர்ஜுனா என்றும் கடுமையாக விமர்சித்தார். கள்ள லாட்டரி சீட்டு விற்பவரும், கஞ்சா விற்பவரும் தவெக எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என கூறும் முதல்வர் விஜய், தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என்றும், அவரது மனைவி, மகள் அவரது பதவியேற்பு விழாவிற்கு வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர் முதல்-அமைச்சராக வந்தால் தமிழகம் அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMK MLATamil Nadu Politicsஅனிதா ராதாகிருஷ்ணன்கொளத்தூர் மக்கள்திருச்செந்தூர் தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆந்திராவில் 3-வது குழந்தைக்கு ரூ.30,000: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்த்தாய் வாழ்த்து

2 Min Read
தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு: நுகர்வோர் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் ஆந்திரா, கர்நாடகா வரத்து குறைந்ததால் பீன்ஸ், கேரட், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் செலவு அதிகரித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தென்காசி: நாளை மறுநாள் மின்தடை – முக்கிய அறிவிப்பு

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி கிராமப்புறம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மின்வாரியம் கோரியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ரூ.10.5 லட்சம் கோடி கடன்: அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் 'ரூ.10.5 லட்சம் கோடி கடன்' பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?