MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?

தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?

Admin
Last updated: ஜூலை 3, 2026 1:04 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.கே இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் முகபாவனை 'ஐயோ நாம் ஏதோ ஒரு பொறியில் மாட்டிக்கொண்டோம்' என நினைப்பதாக இருந்தது என்றும், தவறான இரட்டை அர்த்தம் உள்ள பழமொழிகளை கூறியும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் பிணை வழங்கக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையில் தான் பேசியதாகவும், அரசியல் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக்கொள்ளாமல், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர், 'காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் நிர்வாக குறைபாடு குறித்து மட்டுமே பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவதூறு வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில், '7 தடவை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவருக்கு பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. நலத்திட்ட விழாவில் இதுகுறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை. அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது. அனிதா ராதாகிருஷ்ணன் ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதற்கான தகுதியுடன் பொதுவெளியில் பேச வேண்டும்' என தெரிவித்து, அவருடைய முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anitha Radhakrishnanஅனிதா ராதாகிருஷ்ணன்கைதுதவெகமுன்ஜாமீன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புஷ்பா ஸ்டைலில் வெஸ்பா ஸ்கூட்டரில் வலம் வரலாம்!
Next Article கோயில் வேலைக்கு லஞ்சம்: அமைச்சர் ரமேஷ் தனி இ-மெயில் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மராட்டியத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

மராட்டியத்தில் 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்: பேராசிரியர் எச்சரிக்கை

மராட்டியத்தில் கடந்த 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து எச்சரிக்கை…

ஆகஸ்ட் 18, 2026

பிரதமர் மோடிக்கு ஆதரவாக குஜராத் காவலர் ராஜினாமா

குஜராத் காவலர் ராம்​கர் மோஹன்​கர் கோசாய், பிரதமர்…

ஆகஸ்ட் 18, 2026

சுதந்திர தின விழா: 200+ தீவிரவாதிகள் கைது – உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது நாடு…

ஆகஸ்ட் 18, 2026

உ.பி.யில் 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: நீதிபதி அதிரடி

உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர்,…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: போலீஸ் விசாரணை

கர்நாடக வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடியதாகக்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

அதிமுகவுக்கு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ பொருந்தும்: மாணிக்கம் தாகூர்

இரட்டை இலை சின்னத்துடன் டெபாசிட் இழக்கும் அதிமுகவுக்கு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' பொருந்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை பாகுபலி யானை அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே 'பாகுபலி' யானை இரவில் பாக்கு, தென்னை தோட்டங்களுக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
சென்னையில் தங்க நகை கடையில் தங்க நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 Min Read
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை: பதிவு செய்ய 15 நாட்கள் அவகாசம்

திடக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தகுதியுடைய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?