அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதில், தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீப காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கூறுகையில், '2014-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டவை அம்மா மருந்தகங்கள். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் 'முதல்வர் மருந்தகம்' என பெயர் மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன' என தெரிவித்தார்.

தற்போது, தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்றிவிட்டு, புதிய முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மா மருந்தகங்களின் பெயரையும், அதில் இடம்பெறும் தலைவர்களின் படங்களையும் மாற்றும் விவகாரம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version