தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி திடலில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version