நடிகை ஷகிலாவின் கழுத்து அறுவை சிகிச்சை: காரணத்தை விளக்கிய ஷகிலா!

நடிகை ஷகிலா கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் காணப்பட்டார்.

1990களில் கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை ஷகிலா, மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூலை ஈட்டியதன் மூலம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல பகுதிகளிலும் ரசிகர்களைப் பெற்றார்.

தற்போது கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ள ஷகிலா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதி வரை முன்னேறி, தனது சமையல் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி, அவரை 'கவர்ச்சி நடிகை' என்ற அடையாளத்திலிருந்து மாற்றி, சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை அன்புடன் 'அம்மா' என்று அழைக்க வழிவகுத்தது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷகிலா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக, பிரபலங்களை நேர்காணல் செய்வதில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஷகிலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அவர் தனது கழுத்து அறுவை சிகிச்சை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.

இதற்கு அவரே தனது யூடியூப் பக்கம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், ஒரு பக்கமாக படுத்துக்கொண்டு நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஷகிலா தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் செலவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் அவர் கூறுகையில், 'நான் ஒரு இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் மொபைலில் கேம் விளையாடுவேன். டீ குடிக்க எழுந்திருப்பதைத் தவிர, மீண்டும் வந்து அதே கேமில் மூழ்கிவிடுவேன். கேம் மட்டுமல்லாமல், யூடியூப், இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன். இப்படி மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக என் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இப்போது அது அறுவை சிகிச்சை வரை வந்துவிட்டது' என்று ஷகிலா தனது நிலையை விளக்கியுள்ளார்.

மொபைல் போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு, ஷகிலாவின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version