முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி நன்றி!

நடிகர் சாந்தனு, தனது தந்தையும் மறைந்த பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜின் மறைவின்போது நேரில் வந்து ஆறுதல் கூறியதோடு, அரசு மரியாதையும் செய்து வைத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சாந்தனு, 'Honourable @CMOTamilnadu உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்' என்றும் அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

'அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி Anna' என தனது பதிவை முடித்துள்ளார் சாந்தனு.

முதல்வர் விஜயின் மனிதநேயத்தையும், கலைஞர்களுக்கு அவர் அளிக்கும் மதிப்பையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சாந்தனுவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version