அப்பா அடி வாங்கி நடித்ததன் காரணம் புரிந்தது: நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி

நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு

நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்ட பிரபு, தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சிறுவயதில் அப்பாவிடம் ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள் என்றும், ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமே என்றும் கேட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

அதற்கு நடிகர் செந்தில், 'இயக்குநர்களின் கற்பனையை மாற்றச் சொல்ல முடியாதுப்பா…' என்று பதிலளித்ததாக மணிகண்ட பிரபு கூறினார். அப்போது அந்த பதிலின் அர்த்தம் தங்களுக்கு புரியவில்லை என்றும், ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் அதன் உண்மையான காரணம் புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குடும்பத்தின் நலனுக்காகவே நடிகர் செந்தில் கடினமான கதாபாத்திரங்களையும் எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று நடித்துள்ளார் என்பதை உணர்ந்ததாக மணிகண்ட பிரபு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனது தந்தையின் நடிப்பு வாழ்க்கை மற்றும் குடும்பப் பாசம் குறித்து மணிகண்ட பிரபு மனம் திறந்து பேசியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. தந்தையின் தியாகத்தை உணர்ந்த மகன் அவரைப் பாராட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் செந்திலின் இந்த குணம் பலருக்கும் உதாரணமாக அமைந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version