பிரபல நடிகர் ரவி மோகனுக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற 'உற்சவ் 2026' விழாவில் உயரிய 'தேவி ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிருதாதான விழா, பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன் குளத்தி பகவதி அம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க விழாவில், நடிகர் ரவி மோகன் மற்றும் நடிகை கெனிஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகிற்கு நடிகர் ரவி மோகன் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், குறிப்பாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய மிகச்சிறப்பான நடிப்பைப் பாராட்டியும் இந்த 'தேவி ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் நிகழ்வில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு ஆகியவை நடிகர் ரவி மோகனுக்கு வழங்கப்பட்டன. இந்த கௌரவம் அவரை மேலும் பல சாதனைகளை புரிய தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருது வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, பிரபல நடிகை கெனிஷாவின் மனதை மயக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா, கலைத்துறையின் சிறப்புகளையும், கலைஞர்களின் உழைப்பையும் கொண்டாடும் விதமாக அமைந்தது.