ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர், முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது ஆவின் நிறுவனம் சிக்கல்களை சந்திப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, திமுக ஆட்சியின் கீழ் ஆவினுக்கு 1,825 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பால் கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். ஆனால், விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, கடந்த ஆட்சியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் உள்ளனர். இன்று தமிழ்நாட்டில் இரண்டேகால் கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதிமுக ஆட்சியில் 38 லட்சம் லிட்டர் பால் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் வெறும் 25 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது.

பால் பவுடர் மற்றும் வெண்ணெய் வாங்கி அதில் பணம் சம்பாதிப்பதிலேயே திமுக குறியாக இருந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்கவில்லை. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.80க்கு விற்கின்றன. ஆனால், ஆவினில் லிட்டருக்கு ரூ.60க்கு மட்டுமே விற்கிறது. மேலும், இரவு 8 மணிக்கு மேல் சென்றால் ஆவின் பால் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆவின் பால் கிடைக்காததால் மக்கள் தூங்கி எழுந்தவுடனேயே அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுதான். உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் பாலை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்திருந்தால் இன்று இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. ஆவின் பால் தட்டுப்பாடு கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த தட்டுப்பாட்டை சரிசெய்ய, கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும். ஏற்கனவே ஆவின் நிறுவனம் ரூ.4,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் கீழ் மட்டும் 1,825 கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளால் தற்போதைய சிக்கல்கள் ஏற்படுகின்றன," என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version