MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எரிபொருள் விலை உயர்வு: கடின காலத்துக்கு தயாராகுதல்! – என்ன நடக்கிறது?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எரிபொருள் விலை உயர்வு: கடின காலத்துக்கு தயாராகுதல்! – என்ன நடக்கிறது?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - எரிபொருள் விலை உயர்வு: கடின காலத்துக்கு தயாராகுதல்! – என்ன நடக்கிறது?

பிசின்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: கடின காலத்துக்கு தயாராகுதல்! – என்ன நடக்கிறது?

Admin
Last updated: மே 15, 2026 8:59 மணி
Admin
Share
SHARE

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 'அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எனவே, மக்கள் கடினமான காலத்திற்கு தயாராக வேண்டும். சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் எதுவும் சர்வதேச பொருளாதார கொந்தளிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், இந்தக் கடின காலத்தை கடந்து செல்லக்கூடிய திட்டங்களும், திறனும் அரசிடம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக மீண்டு எழுவோம்' என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிலைமையை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளார். "பெட்ரோல், டீசல் விலை உலகளவில் உயர்ந்துள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவது நமது பொறுப்பு. சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தேசபக்திக்கு சிறந்த பங்களிப்பாகும். இது குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர் போன்ற ஆசியப் பொருளாதாரத்தின் முக்கிய நாடுகளின் தலைவர்களின் எச்சரிக்கைகள், நாம் அனைவரும் கடினமான காலத்துக்குத் தயாராக வேண்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மே 15, 2026 நிலவரப்படி, சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 106 முதல் 109 டாலர் வரை வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயில் இது ரூ.8,300-ஐ கடந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஏப்ரல் 2026-ல் 8.3% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த நிலையில், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம், நாட்டின் பணவீக்கத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது FMCG பொருட்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்கள், கார்கள் பயன்படுத்துவோரின் எரிபொருள் செலவு அதிகரிக்கும். டீசல் விலை உயர்வால் பேருந்து, ஆட்டோ, வாடகை டாக்சிகள், சரக்கு வாகன சேவைகளின் கட்டணங்கள் உயரும். இதனால், பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் விலையும் உயரும். ஏற்கனவே, அமுல், மதர் டெய்ரி போன்ற பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 வரை பால் விலையை உயர்த்தியுள்ளன. கிராமப்புறங்களில், டீசல் டிராக்டர்கள், நீரேற்று இயந்திரங்கள், வேளாண் சரக்கு வாகனங்கள் அதிகம் சார்ந்திருப்பதால், விவசாய உற்பத்திச் செலவும் அதிகரித்து, உணவுப் பொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, பெட்ரோல், டீசல் நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) 5% பங்களிக்கிறது. இவற்றின் விலை 3% உயர்ந்தால், CPI-ல் 0.15% தாக்கம் இருக்கும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட LPG, CNG விலையையும் சேர்த்தால், பணவீக்கத்தில் மேலும் அழுத்தம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின்போது, பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

நுகர்வோரின் கருத்துக்களும் இந்த விலை உயர்வால் தங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கின்றன. சிலர், 'இந்த விலையேற்றம் இத்துடன் நிற்குமா அல்லது தொடருமா' என கவலை தெரிவித்துள்ளனர். வேறு சிலர், 'போர் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளின் ஆணிவேரை உணர்ந்து, அரசு தீவிர பரிசீலனைக்குப் பின்னரே இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்' என்று அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். இத்தகைய சூழலில், சிக்கன நடவடிக்கையாக பிரதமர், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். டெல்லி முதல்வர் அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' அறிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Fuel Price HikeGlobal economyInflationஉலகப் பொருளாதாரம்எரிபொருள் விலைபணவீக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை டெக் மகிந்திராவில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
Next Article ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹரித்வார் நகரில் குப்பைகள் நிறைந்து காணப்படும் காட்சி

ஹரித்வார் புனித பூமி குப்பை மேடானது: பக்தர்கள் வருகையால் அவதி

உத்தராகண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வார், 5 கோடி பக்தர்களின் வருகைக்குப் பிறகு…

ஆகஸ்ட் 14, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 82,800 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில்…

ஆகஸ்ட் 14, 2026

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு: 600 பேர் மீது வழக்கு

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக்…

ஆகஸ்ட் 14, 2026

கொல்கத்தா மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்: உடல் கழிவறையில் மீட்பு

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்…

ஆகஸ்ட் 14, 2026

உத்தராகண்ட் சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், விஷ்ணுகாட்-பிப்பல்கோட்டி நீர்மின்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

Bajaj Pulsar N125 பைக்
ஆட்டோமொபைல்

570 கி.மீ மைலேஜ்: பட்ஜெட் விலையில் Bajaj Pulsar N125 அசத்தல்!

சிறப்பான மைலேஜ் மற்றும் பட்ஜெட் விலையில் அசத்தும் Bajaj Pulsar N125 பைக்! முழு விவரங்கள் இதோ.

3 Min Read
மாருதி சுஸுகி ஈகோ 7 சீட்டர் கார்
ஆட்டோமொபைல்

மலிவு விலை 7 சீட்டர் கார்: மாருதி சுஸுகி ஈகோ அம்சங்கள்

இந்தியாவின் மலிவான 7 சீட்டர் காரான மாருதி சுஸுகி ஈகோவின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏழை எளிய மக்களின் தேவைகளைப்…

2 Min Read
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கும் காட்சி
பிசின்ஸ்

இந்தியாவின் முதல் 500 நிறுவனங்களில் 9 பெண் சி.இ.ஒ-க்கள் மட்டுமே: மத்திய அரசு தகவல்

இந்தியாவின் முன்னணி 500 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெறும் 9 பெண் தலைமை செயல் அதிகாரிகள் (சி.இ.ஒ) மட்டுமே பணியாற்றி வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 Min Read
Avore EX2S மின்சார பைக்
ஆட்டோமொபைல்

260 கி.மீ மைலேஜ் தரும் Avore EX2S மின்சார பைக் அறிமுகம்!

Avore நிறுவனம் புதிய Avore EX2S மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 260 கி.மீ மைலேஜ் தரும் இந்த பைக்கின் விலை ரூ. 1,77,106…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?