ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 1976-ல் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொடிய நோய், தற்போது 17-வது முறையாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. மருத்துவ நிபுணர்கள் இது மிகவும் ஆபத்தான, எளிதில் பரவக்கூடிய நோய் என எச்சரித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, காங்கோவில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றால் இதுவரை 65 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இடூரி மாகாணத்தில் மட்டும் சுமார் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018-ல் ஏற்பட்ட பரவலை விட குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும், உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளது.
எபோலா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆயுதக்குழுக்களின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ, தற்போது எபோலா பரவலால் மேலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இந்த கொடிய வைரஸ் பரவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் கட்டுக்குள் கொண்டு வர அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.