தமிழக அரசின் சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் கீழ், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு சொந்த ஊரிலேயே அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.08.2026 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தப் பணி 11 மாதங்கள் அல்லது திட்டத்தின் செயலாக்கம் முடியும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீடிக்கும். இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்றும், எந்தக் காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனைக் குழுவின் தலைவரின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்கள் 27.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முழுமையான முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதிக்கான ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ்/ 10ஆம் வகுப்பு சான்றிதழ்/ 12ஆம் வகுப்பு சான்றிதழ்), கல்வித் தகுதிக்கான சான்றுகள், செவிலியர் பட்டயச் சான்று/பட்டச்சான்று மற்றும் மதிப்பெண் சான்றுகள், மற்றும் இருப்பிடச் சான்றுகள் (ஆதார் அட்டை அல்லது வருவாய்த் துறையிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ்) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம். மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையடையாத விவரங்கள் அல்லது தேவையான சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சொந்த ஊரிலேயே அரசுப் பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
